என் மலர்
நீங்கள் தேடியது "நலிந்து வரும் தொழில்"
- 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீண்டகால பலன்தரும் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.
- தண்ணீரில் ஊற வைத்து பதப்படுத்தும் கூலித்தொழிலாளர்கள், தென்னங்கீற்று முடைந்து விற்பனை செய்கின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தி யாப்பட்டணம், பெத்தநா யக்கன் பாளையம் பகுதியில் வசிஷ்டநதி, வெள்ளாற்றுப்ப டுகை கிராமங்கள், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநா யக்கன்பட்டி கரியக்கோயில் அணை பாசன கிராமங்கள் உள்பட 200-க்கும் அதிக மான கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீண்டகால பலன்தரும் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.
தென்னை மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை சேகரித்து, தண்ணீரில் ஊற வைத்து பதப்படுத்தும் கூலித்தொழி லாளர்கள், தென்னங்கீற்று முடைந்து விற்பனை செய்கின்றனர். வாழப்பாடி பகுதியில் இத்தொழில் பல நூறாண்டாக தொடர்ந்து வருவதால் பாரம்பரிய கைத்தொழில்களின் ஒன்றாக தொடர்ந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மட்டுமின்றி, ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் தென்னை மட்டைகளை எண்ணிக்கை அடிப்படை யில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கீற்று வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களை கொண்டு கீற்று முடைந்து கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
சிதம்பரம், விழுப்புரம், பெரம்பலுார், அரியலுார், கடலுார், சென்னை, காஞ்சி புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு, வாழப்பாடி, பெத்தநா யக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், பேளூர் பகுதியில் இருந்து தென்னங்கீற்றுகள் விற்பனைக்கு செல்கிறது. கடலோர கிராமங்களில் குடிசை வீடுகள் அமைக்க வும், கால்நடை வளர்ப்பு கொட்டகைகளின் மேற்கூரை வேய்வதற்கும், மாநாடு, விழாக்கால பந்தல்கள், கூடாரங்கள், சினிமா செட்டிங் அமைப்ப தற்கும் தென்னங்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
வாழப்பாடி பகுதியில் ஏராளமான கிராமங்களில், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைத்து வந்ததால், தென்னங்கீற்று முடையும் தொழிலை நம்பி, பாரம் ஏற்றுவோர், கீற்று முடைவோர், வாகனம் ஓட்டுவோர் உள்பட 10, ஆயி ரம் கூலித்தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வந்தனர். நாளொன்றுக்கு 200 கீற்று முடையும் பெண் தொழிலா ளர்களுக்கு ரூ. 400, பாரமேற்றும் ஏற்றும் ஆண் தொழிலா ளர்களுக்கு ரூ.600 வரையும், தினக்கூலியாக கிடைத்து வந்தது.
புயல் மற்றும் மழையில் அடிக்கடி சேதமடைந்து போவதாலும், எளிதில் தீப்பற்றிக்கொள்வ தாலும், தென்னங்கீற்று கூரை வேய்வதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்கா ததாலும், உள்ளூரில் தென்னங்கீற்று பயன்பாடு குறைந்து போனது.
கடலோர மாவட்டங்க ளில் கொட்டகை, வீட்டுக் கூரை வேய்வதற்கும், பல்வேறு மாநாடு, பொதுக்கூட்டம், சினிமா செட்டிங் பந்தல் அமைப்ப தற்கும் பல்வேறு விதமான நவீன முறை தகடுகள், நெகிழி மற்றும் சிமெண்ட் அட்டைகளே தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இதனால், தற்போது முடைந்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தென்னங்கீற்றுகளை விற்பனை செய்ய முடியா மல், விவசாயிகள், வியா பாரிகள் மற்றும் தொழிலா ளர்களும் தவித்து வருகின்றனர்.
இதனால், சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தி யாப்பட்டணம், பெத்தநா யக்கன்பாளையம் பகுதி கிராமப்புற மக்களின் பாரம்பரிய கைத்தொழில்க ளில் ஒன்றான கீற்று முடை யும் தொழில் நலிந்து வருகிறது. எனவே இத்தொ ழிலை கைவிட்டு வரும் தொழிலாளர்கள், பாக்கு உரித்தல், ஆடு, கறவைமாடு வளர்த்தல், கட்டடத்தொ ழிலுக்கு மாறி வருகின்றனர்.
இதுகுறித்து பொன்னா ரம்பட்டியைச் சேர்ந்த தென்னங்கீற்று வியாபாரி கலைச்செல்வி ஜீவா கூறியதாவது:-
தென்னங்கீற்று முடையும் தொழிலை கற்றுக்கொள்ள இளையத் தலைமுறை தொழிலாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலை யில், குறைந்த விலைக்கு நீடித்து உழைக்கும் நெகிழி, சிமெண்ட் மற்றும் கலாய் இரும்பு தகடுகள் விற்ப னைக்கு வந்து விட்டதால் தென்னங்கீற்று பயன்பாடு அறவே குறைந்து விட்டது.
எனவே, ஆர்டர் கிடைக்காததால், ஆயிரக்க ணக்கான தென்னங்கீற்று கள் கேட்பாரற்று தேங்கி கிடக்கிறது.
எனவே, வியா பாரிகளும், தொழிலாளர்க ளும் இத்தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






