என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயினை எவ்வாறு அணைப்பது"

    • சுழற்சி முறையில் பணி
    • காவலர்களுக்கு செய்முறை விளக்கம்

    வேலூர்,

    வேலூர் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்து மற்றும் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் உத்தரவின் பேரில் 5 நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணிப்புரியும் போலீஸ் எண்ணிக்கையை 30 ஆக அதிகப்படுத்தி மும்முறை சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களுக்கு விபத்து நேரத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக எவ்வாறு முதலுதவி வழங்க பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் திடீர் தீ விபத்து ஏற்படும் சமயங்களில் தீயினை எவ்வாறு அணைப்பது மற்றும் தீக்காயம் அடைந்தவர்களை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பதை பற்றிய வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பான்களை வைத்து துரிதமாக தீயினை எப்படி அணைப்பது என்பதை பற்றிய பயிற்சி எடுக்கப்பட்டது. மேலும் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் குற்றங்களை தடுப்பதை குறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி)மருத்துவர் பிரசன்ன குமார் விரிவான செய்முறைகளை செய்து காண்பித்தார்.

    வேலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீயணைப்பு வீரர்கள் மூலம் நெடுஞ்சாலை ரோந்துப்பணி காவலர்களுக்கு செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    ரோந்து பிரிவினரின் முக்கியத்துவம் குறித்தும், பொதுமக்களின் உயிரையும் உடைமையும் காப்பது குறித்த விரிவான அறிவுரைகளை வழங்கினர்.

    காயமடைந்தவர்களை முதலுதவி செய்து மீட்பதற்கான போன்ற உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் வழங்கினார்.

    ×