என் மலர்
நீங்கள் தேடியது "பணியாளர்கள் திடீர் தர்ணா"
- 24 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது
- 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு,
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் தற்காலிகமாக தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அப்போது திடீரென பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கூறும் போது அரசு விடுமுறை நாட்களில் எங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதில்லை. 30 நாட்கள் பணிபுரிந்தாலும் 24 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது.
உழைப்பவர்களின் நிலையை கண்டும் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செயல் அலுவலர் முத்து, கவுன்சிலர் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.






