என் மலர்
நீங்கள் தேடியது "கடத்தி திருமணம்"
- போலீசில் புகார்
- 2 பேரை தேடி வருகின்றனர்
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சேர்ப்பாப்பட்டு பொன்வயல் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் மகன் சீதாபதி.
டிரைவரான இவர், 17 வயது சிறுமியை அவரது பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமியும், அவரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை,
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
அதன் போலீசார் சிறுமியை கடத்தி திருமணம் செய்த சீதாபதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் தேடி வருகின்றனர்.






