என் மலர்
நீங்கள் தேடியது "கவுன்சிலர்கள் போர்க்கொடி"
- பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்று சக தி.மு.க. கவுன்சிலர்களே தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
- ஒப்பந்த பணிகளிலும் முறைகேடு செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி தலைவியாக தி.மு.க.வை சேர்ந்த கவிதா ராஜா உள்ளார். இவர் நகர தி.மு.க. செயலாளர் ராஜாவின் மனைவி ஆவார். இங்கு 13 தி.மு.க. கவுன்சிலர்களும், 3 அ.தி.மு.க. கவுன்சிலர்களும், 2 காங்கிரஸ் கவுன்சிலர்களும் உள்ளனர்.
இந்த பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்று சக தி.மு.க. கவுன்சிலர்களே தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலும் ஒப்பந்த பணிகளிலும் முறைகேடு செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை தொடர்ந்து தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றக்கோரி தம்மம்பட்டி பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 15 கவுன்சிலர்கள் இன்று சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கினர்.அவர்கள் கூறுகையில், தம்மம்பட்டி பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குனர் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கும் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கும் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக் கையும் இல்லை. தொடர்ந்து மேலும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் 15 வார்டு கவுன்சிலர்களும் ராஜி னாமா செய்வதாக முடிவு செய்துள்ளோம் என்றனர்.






