என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் முன்பதிவு"
- தமிழகத்தில் அரசு பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்ப டுவது வழக்கம்.
- நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் 17-ந் தேதி தொடங்கியது.
சேலம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்ப டுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் 17-ந் தேதி தொடங்கியது.
இதையடுத்து சேர்க்கை பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, அரசுப் பள்ளிகளில் சேருவதால் கிடைக்கும் பலன்கள், நலத்திட்டங்களை முன்வைத்து ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன் பலனாக அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
1-ம் வகுப்பு சேர்க்கைக்கு மட்டும் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் விண்ண ப்பங்களை பெற்றுள்ளனர். இதனால் நடப்பு ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






