என் மலர்
நீங்கள் தேடியது "கிராம சபா ஏற்பாடுகள்"
- நாளை நடக்கிறது
- அதிகாரிகள் ஆய்வு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் நாளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
அதற்கான இடத்தை மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட திட்ட துணை இயக்குநர் விஜயகுமாரி இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், கிருஷ்ணன் மற்றும் மண்டல வட்டார துணை அலுவலர் லோகநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் குமார், எழுத்தாளர் அன்பு பணி தள பொறுப்பாளர் விஜியா ஆகியோர் உடனிருந்தனர்.






