என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்பேஸ்"

    • ஐஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள், விண்கலத்தின் லேசர் கருவியின் செயலிழப்பே விபத்துக்குக் காரணம் என்று கூறி உள்ளனர்.
    • நாசாவுடன் இணைந்து 4-வது முயற்சிக்கான திட்டம் ஒப்பந்தமாகி உள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையமான ஜாஸா ஏற்கனவே நிலவில் விண்கலத்தை தரையிறக்கி உள்ளது. அங்குள்ள தனியார் நிறுவனமான ஐஸ்பேஸ் நிறுவனம், ரெசிலியன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜனவரி மாதம் நிலவுக்கு அனுப்பியது. நிலவின் வடக்கில் அமைந்துள்ள உறை கடல் எனப்படும் மார் பிரிகோரிசில் தரையிறங்கும் இலக்குடன் அந்த விண்கலம் அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் இந்த மாத தொடக்கத்தில் நிலவின் தரையில் மோதி செயல் இழந்தது.

    ரெசிலியன்ஸ் விண்கலம் மற்றும் அதன் உலவு கருவி ஆகியவை விழுந்து நொறுங்கி கிடக்கும் இடத்தை நாசாவின் லூனார் விண்கலம் கடந்தவாரம் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியது.

    ஐஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள், விண்கலத்தின் லேசர் கருவியின் செயலிழப்பே விபத்துக்குக் காரணம் என்று கூறி உள்ளனர். லேசர் கருவி நிலவின் மேற்பரப்பு தூரத்தை துல்லியமாக அளவிட்டு கொடுக்காததால், வேகமாக சென்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறி உள்ளனர்.

    மென்பொருள் செயலிழப்பால் கடந்த 2023-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் முதல் நிலவு விண்கலம் தரையிறங்க முடியாமல் விபத்துக்கு உள்ளானது. தற்போது அடுத்த 2 ஆண்டுகளுக்குள்ளாக அதன் 2-வது முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. அந்த நிறுவனம் தனது 3-வது முயற்சியை 2027-ல் செய்ய உள்ளது. நாசாவுடன் இணைந்து 4-வது முயற்சிக்கான திட்டமும் ஒப்பந்தமாகி உள்ளது.

    சமீபத்திய ஆண்டுகளில் தனியார் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட 7 நிலவில் தரையிறங்கும் முயற்சிகளில், ஒன்று மட்டுமே முழுமையான வெற்றி பெற்றுள்ளது. பயர்பிளை ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் மார்ச் மாதத்தில் அதன் புளூ கோஸ்ட் லேண்டரை நிலவில் தரையிறக்கியது குறிப்பிடத்தக்கது.

    • ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் ஹக்குடோ விண்ணில் ஏவப்பட்டது.
    • விண்கலம் நிலவில் தரையிறங்கும் வீடியோ யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்படுகிறது.

    ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஐஸ்பேஸ் நிறுவனம் தனது விண்கலத்தை நிலவில் தரையிறங்க செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஐஸ்பேஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில் நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை பெற்றுவிடும்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் ஹக்குடோ விண்ணில் ஏவப்பட்டது. கடந்த மாதம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்த ஹக்குடோ விண்கலம் தற்போது 100 கிலோமீட்டர் உயரத்தில் நிலவை சுற்றி வருகிறது.

    இன்றிரவு 10.10 மணிக்கு ஹக்குடோ விண்கலம் நிலவில் தரையிறங்க இருக்கிறது. விண்கலம் நிலவில் தரையிறங்கும் வீடியோ ஐஸ்பேஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் நேரலை செய்யப்பட இருக்கிறது. ஹக்குடோ விண்கலம் 2.3 மீட்டர் உயரமும், 2.6 மீட்டர்கள் அகலமாகவும் உள்ளது. இதில் உள்ள எரிபொருள் உள்பட விண்கலத்தின் மொத்த எடை 1000 கிலோ ஆகும். 

    • முதல் மூன்று நிலைகளை சாதாரணமாக கடந்த சென்றது.
    • 4-வது நிலையில் குறித்த இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

    சீனாவின் ஐஸ்பேஸ் (iSpace) என்ற தனியார் நிறுவனம் ஹைபர்போலா-1 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 24 மீட்டர் நீளம் கொண்டது. உயர் திட எரிபொருள் மூலம் இயங்கக் கூடியது. இந்த ராக்கெட் இன்று உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு செயற்கைக்கோள் மற்றும் நிலநடுக்கம் முன்னறிவிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

    முதல் மூன்று நிலைகளை வெற்றிகரமாக ராக்கெட் கடந்தது. ஆனால் நான்காவது கட்டத்தில் இலக்கு நோக்கி செல்லவில்லை. பின்னர் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியடைந்ததாக ஐஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததால் மூன்று செயற்கைக்கோள்களும் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட முடியாமல் போனதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக ஐஸ்பேஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய தனியார் நிறுவுனம் என்ற பெருமையை பெற்றது. அதன்பின் தொடர்ந்து மூன்று முறை ராக்கெட் செலுத்திய முயற்சியில் தோல்வியை சந்தித்தது.

    ×