என் மலர்
நீங்கள் தேடியது "லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்"
- வேலூர் டி.ஐ.ஜி. அதிரடி உத்தரவு
- லாரியை வழி மடக்கி டிரைவரை தள்ளிவிட்டு ஆந்திரவுக்கு லாரியை கடத்தி சென்றனர்
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூரை சேர்ந்தவர் முரளி. இவருக்கு சொந்தமான லாரி கடந்த 2015-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புல்லட் மோட்டார் சைக்கிள் வாகனத்திற்கு ஸ்பேர் பார்ட்ஸ் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்றது.
வெலக்கல்நத்தம் அருகே லாரி வந்த போது, டாடா சுமோவில் வந்த 6 பேர் கும்பல் லாரியை வழி மடக்கி டிரைவரை தள்ளிவிட்டு ஆந்திரவுக்கு லாரியை கடத்தி சென்றனர்.
இதனையடுத்து லாரி உரிமையாளர் முரளி நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அப்போது இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த காமராஜ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாகவேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஜார்தான்கொல்லை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரை கைது செய்தனர்
அப்போது ராஜசேகரன் கடத்திய லாரியை உடைத்து விற்று விட்டதாகவும் அதற்கு உண்டான பணத்தை தான் செலுத்தி விடுவதாகவும் கூறினார் பின்னர் போலீஸ் நிலையத் தில் வைத்து ரூ.12 லட்சம் கொடுப்பதாக உறுதிய ளித்து முதல் தவணையாக ரூ.7 லட்சம் கொடுத்தார்.
அந்த பணத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் போலீஷ் நிலையத்தில்வைத் திருந்ததாக தெரிகிறது மேலும் தொடர்ந்து மீதம் உள்ள பணத்தை கொடுக்க போலீசார் வற்புறுத்தியதை அடுத்து ராஜ சேகரன் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் விரைந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சோதனை செய்து கணக்கில் வராத 7 லட்சத்தை கைப்பற்றி கையும், களவுமாக பிடித்தனர்.
அதில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகிய இருவரையும் கைது செய்து சஸ்பெண்ட்டு செய்யப்படடனர்.
இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், தற்போது வேலூர் சரக டிஐஜி முத்துசாமி இன்ஸ்பெக்டர் காம ராஜ், சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் 4 போலீசார் உட்பட 6 பேரை பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
அதில் நாட்றம்பள்ளி போலீஸ் நிலையத்தில் பணிபுரித்து வந்த இன்ஸ்பெக்டர் காமராஜ். சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் குற்றப்பிரிவு தலைமைக்காவலர் நாசர் (தற்போது ஆலங்காயம் போலீஷ் நிலையத்தில் பணியாற்றுகிறார்) கார்த்திக் (வாணியம்பாடி நகர போலீஸ் நிலையம்), அறிவு செல்வம் (வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையம்), ரகுராம் (ஜோலார்பேட்டை டவுன் போலீஸ் நிலையம்) ஆகிய போலீசார் உட்பட 6 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.






