என் மலர்
நீங்கள் தேடியது "108 அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்"
- ஸ்ரீ சர்வ மங்கள காளி அம்மனுக்கு மகா தீபாராதனை
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை அமாவாசை முன்னிட்டு திரளான பெண்கள் 108அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு பழ வகைகள் கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் செய்யப்பட்டது.
பின்னர் உலக நன்மை வேண்டி கோவில் வளாகத்தில் ஸ்ரீ ஸர்வ மங்கள மகா வேள்வி பூஜை நடைபெற்றது.
பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று தலையில் 108 அக்னி சட்டி ஏந்தி கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து மங்கல மேள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ சர்வ மங்கள காளி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது
வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.






