என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய அரசின் காயகல்ப் விருது"
- பேளூரில் 1973 டேணிடா திட்டத்தின் கீழ் சுகாதார மையம் அமைக்கப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டது.
- 4 ஆண்டுக்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு மருத்துவர், செவிலியர் மற்றும் பணி யா ளர்கள் நியமிக்கப்பட்டனர்.
வாழப்பாடி, ஏப்.17-
வாழப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பேளூரில் 1973 டேணிடா திட்டத்தின் கீழ் சுகாதார மையம் அமைக்கப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 ஆண்டுக்கு பிறகு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு மருத்துவர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி, திருமனுார் மற்றும் பேளூர் ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுப்படுத்தி இயக்கும் வட்டார சுகாதார நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்த வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்த தால், கடந்த 2016–-ல் 30 படுக்கையுடன் கூடிய அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
6ஆண்டுக்கு முன் வாழப்பாடியைச் சேர்ந்த மருத்துவர் சி.பொன்னம்ப லம் வட்டார மருத்துவ அலு வலராக நியமிக்கப்பட்டார். இவரது ஒருங்கிணைப்பால், மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், பொது மக்கள் ஒத்துழைப்போடு புதுப்பிக்கப்பட்டு, கனிவோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு சுகாதாரத்துறை, அரசு சாரா நிறுவனங்கள், பெரு நிறுவனங்களை அணுகிய மருத்துவக்குழு வினர்,ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் கட்ட மைப்பு வசதிகளும் ஏற்படுத்தி யுள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக சிகிச்சை பெறும் 300 பயனாளிகளின் அனைத்து விபரங்களும், மத்திய அரசின் டிஜிட்டல் திட்டத்தின் கீழ் கணினியில் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்ப டுகிறது.
இதுமட்டுமின்றி, சுகாதார மைய வளாகத்தில் எண் '8' வடிவ நடைபயிற்சி திடல், மூலிகைத் தோட்டம், பயாளிகள் ஓய்வறை, கரோனா சளி மாதிரி சேகர கூடாரம், கர்ப்பிணிகளுக்கான பிரத்யோக சிகிச்சை அரங்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்ப டுத்தப் பட்டுள்ளன. சிகிச்சை பெற வரும் பயனாளிகளை வர வேற்கும் வகையில், நுழைவு வாயிலில் தாமரைக்குளம், புல்வெளிப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆத்துார் சுகாதார மாவட்ட துணை இயக்குர் ஜெமினி வழிகாட்டுதலின் படி, வட்டார மருத்துவ அலு வலர் சி.பொன்னம்ப லம் தலைமையிலான குழு வி னர் சிறப்பாக பணியாற்றி வரும், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம், கடந்த ஆண்டு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கி யது. இதனைத்தொடர்ந்து, சிறந்த சுகாதார நிலை யத்திற்கான காயகல்ப் விருது வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் சுகாதார நிலையங்களை தேசிய சுகாதார குழுமத்தின் குழு ஆய்வு செய்தது. இந்த குழுவினர் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மதிப்பீடு செய்து 100-க்கு 99.43 மதிப்பெண்கள் வழங்கிய தால், தற்போது மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மாநில அளவில் முதலி டம் பிடித்ததால் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ. 15 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியை சுகாதார நிலையத்தின் மேம்பாட்டிற்கு பயன்ப டுத்திக் கொள்ளலாம். விரைவில் சென்னையில் நடைபெறும் அரசு விழா வில் இந்த விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.






