என் மலர்
நீங்கள் தேடியது "சுடுகாடு இடம்"
- பொதுமக்கள் சாலை மறியல்
- போலீசார் பேச்சுவார்த்தை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் கொண்டகினந்தப்பள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குண்டு கொல்லை பகுதியில் சுமார் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
குண்டு கொல்லை பகுதியில் சாலையோரத்தில் சுமார் 100 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு இடத்தில் சுடுகாடு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2006 ஆண்டு தனிநபர் ஒருவர் சுடுகாட்டு இடத்திற்கு பட்டா வாங்கி உள்ளார். இது சம்பந்தமாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பட்டா பெற்றவர் கோர்ட்டு வழக்கு நிலுவையில் உள்ள போது தனது உறவினரின் பொக்லைன் எந்திரம் மூலம் சுடுகாடு இடத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது புதைக்கப்பட்ட இடத்தில் எலும்பு கூடுகள் வெளியே வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் வழக்கு நிலுவையில் உள்ள போது ஏன் சுத்தம் செய்கிறாய் என கேட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டு இருந்தார். இதனால் அப்பகுதி பொது மக்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மறியல் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததனர்.
இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.






