என் மலர்
நீங்கள் தேடியது "நிதியுதவி பெற விண்ணப்பம்"
- கலெக்டர் தகவல்
- நேரடியாக அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்
ராணிப்பேட்டை:
தமிழ்நாட்டில் சொந்த கட்டி டங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத் தல் பணிகள் திட்டத்தின் கீழ் தேவாலயத்தில் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத் தின் வயதிற்கேற்ப மானியத் தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.
அதன் படி தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை அமைத் தல், குடிநீர் வசதிகள் உருவாக் குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளலாம். தேவா லய கட்டிடத்தின் வயதிற் கேற்ப 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்க ளுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.2 லட் சத்தில் இருந்து ரூ. 4 லட்சமாக வும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும். உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக பூர்த்தி செய்து வழங்கப்படும் விண்ணப்பங் களை கலெக்டர் தலைமையிலான குழு அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, தேவாலயங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்வார்கள்.
கட்டிடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகிய வற்றுடன் தகுதியின் அடிப்ப டையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறு பான்மையினர் நல இயக்குன ருக்கு நிதியுதவி வேண்டி பரிந் துரை செய்யப்படும்.
நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். ராணிப்பேட்டைமாவட்டத் தில், இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொள்ளலாம்.






