என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ள தடுப்பு சுவர்"
- நகர மன்ற தலைவர் ஆய்வு
- 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் ஆற்றின் இருபக்கமும் கரைகளிலும் சுமார் 1500-க்கும் அதிகமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன அந்த வீடுகளை கடந்தாண்டு அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆற்றின் இருபுற கரைகளிலும் வெள்ள தடுப்பு சுவர் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆற்றின் கரையின் இரு பகுதியிலும் ராட்சத எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் சீர் செய்யும் பணிகளும் தொடர்ந்து வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை நேற்று குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை பணி மேற்பார்வையாளர் சிவாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வசந்தாஆறுமுகம், மகாலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 2 பக்க கரைகளில் தலா 2½ கிலோ மீட்டர் நீளத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது சுமார் 5 மீட்டர் உயரத்திற்கும் 7 மீட்டர் அகலத்திற்கும் இந்த வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.






