என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பத்தினர் இளம்பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்"

    • திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண் டிப்ளமோ முடித்துள்ளார்.

    போளூர் அருகே உள்ள அத்திமுர் களியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) விவசாயி. இவரும் இளம் பெண்ணும் கடந்த 7 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இளம் பெண் பிரபாகரண் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்ய கோரி கேட்டுள்ளார். இதனால் வீட்டில் இருந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    பின்னர் இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×