என் மலர்
நீங்கள் தேடியது "மோதலில் 2 பேர் காயம்"
- வீட்டின் அருகே நிறுத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க வேண்டும் என்று வாடகைக்கு குடியிரு ப்பவர்கள் மாதேஷிடம் கூறியுள்ளனர்.
- மாதேஷ், அவரது பிளஸ்-2 படிக்கும் மகள் ஆகியோரை அவர்கள் தாக்கியுள்ளனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பொன்னன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது44). இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டுக்குப் பின்புறம் உள்ள வீடுகளில் சிலர் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது வீட்டின் அருகே நிறுத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க வேண்டும் என்று வாடகைக்கு குடியிருப்பவர்கள் மாதேஷிடம் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மாதேஷ், அவரது பிளஸ்-2 படிக்கும் மகள் ஆகியோரை அவர்கள் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து மாதேஷ் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் அந்த பகுதியைச் சேர்ந்த சின்னசாமி, சுதகார் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






