என் மலர்
நீங்கள் தேடியது "ஆணையாளர் தகவல்"
- கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வழங்கப்பட்டுள்ளது
- வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணபிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் சுத்தம் செய்யும் வாகனங்களுக்கு உரிமம் பெற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடு மற்றும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் டிரெய்லர்களில் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022 ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணபிக்க வேண்டும். நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் பெற விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
இதற்கான கட்டணம் ரூ.2000 செலுத்த வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட வாகனங்களை உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும்.கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற்று இயக்க வேண்டும்.
உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கிருஷ்ணகிரி நகராட்சியினரால் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் நீதிமன்றம் மூலமாக வழக்குபதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






