என் மலர்
நீங்கள் தேடியது "துப்பாக்கியுடன் சென்ற வாலிபர் கைது"
- போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
- ஜெயிலில் அடைப்பு
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில், ஜவ்வாது ராமசமுத்திரம் பகுதியில் திம்மாம்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஜெ.ஆர்.சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் யுவராஜ் (வயது 28) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவரை நிறுத்தி சோதனை செய்த போது அவர் வனப்பகுதியை ஒட்டி உள்ள ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரி பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப் பாக்கியுடன் சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து யுவராஜை கைது செய்து வாணியம்பாடி கோர்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






