என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமாள் கோவிலில் மகா யாகம்"

    • சிறப்பு பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, அடுத்த இஞ்சிமேடு, வரதராஜ, பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திரம் மகாயாகம் நடந்தது.

    காலையில் பாலாஜி, பட்டர் தலைமையில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார் சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், சீதாதேவி, ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, திருமஞ்சனம் செய்தனர். 27 சுவாதி நட்சத்திரம் மகா கோலம் பல்வேறு வண்ண அரிசி மூலம் வரையப்பட்டு. பல்வேறு மூலிகைகள் மூலம் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகிகள் பாலாஜி, வேங்கடநாதன், ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×