என் மலர்
நீங்கள் தேடியது "வாளுடன் ஊர்வலம் வந்த வாலிபர்கள்"
- வேசம் அணிந்து வாலிபர்கள் சிலர் போர்வாள், கத்தி மற்றும் சமுதாய கொடியுடன் ஊர்வலமாக நடனமாடி வந்ததை சாலையில் நடந்து சென்ற கிராமமக்கள் அச்சமடைந்தனர்.
- கோவில் திருவிழாக்களை கட்டுப்பாடுடன் நடத்த போலீசார் அறிவுரை வழங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி செங்கட்டாம்பட்டியில் முத்தாலம்மன், பகவதியம்மன் கோவில் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின்பு நடத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய நிகழ்ச்சியான வேசம் அணிந்து ஊர்வலம் வந்தது.
அப்போது கிழக்கு தெருவைசேர்ந்த வாலிபர்கள் சிலர் போர்வாள், கத்தி மற்றும் சமுதாய கொடியுடன் ஊர்வலமாக நடனமாடி வந்தனர். இதைபார்த்ததும் சாலையில் நடந்து சென்ற கிராமமக்கள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர். திருவிழாக்களின்போது உற்சாக மிகுதியால் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே கோவில் திருவிழாக்களை கட்டுப்பாடுடன் நடத்த போலீசார் அறிவுரை வழங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்






