என் மலர்
நீங்கள் தேடியது "கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது"
- போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
- ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள புது ஓட்டல் தெரு பகுதியில் வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
திருப்பத்தூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






