என் மலர்
நீங்கள் தேடியது "நலப்பணித் திட்ட நிறைவு விழா"
- நாட்டு நல பணி திட்ட முகாம் நிறைவு விழா இட்டிக்கல் அகரம் ஊராட்சி பால குறி கிராமத்தில் நடைபெற்றது.
- கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெகன் வரவேற்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்ட முகாம் நிறைவு விழா இட்டிக்கல் அகரம் ஊராட்சி பால குறி கிராமத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெகன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் நிறைவு பேருரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் குமரவேல் மாணவ, மாணவியர்களுக்கு எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்து சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். பாலக்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் சூரியப் பெருமாள், கவுன்சிலர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழாவில் அனைத்து துறை தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் இட்டிகல் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி சேகர், இட்டிக்கல் அகரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராதிகா திருப்பதி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெகன், ராமமூர்த்தி, ஸ்டீபன் விக்டர் ஆண்டனி ஆகியோர் நாட்டு நலப்பணித் திட்ட அறிக்கையை வாசித்தனர். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவி தனுஜா நன்றி கூறினார்.






