என் மலர்
நீங்கள் தேடியது "108 பால்குட அபிஷேகம்"
- 3 கி.மீ. நடந்து சென்று நேர்த்திகடன்
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அனுமன் கோவில் உள்ளது. இங்கு அனைத்து பவுர்ணமி தினத்தன்று சிறப்பு அலங்காரம் செய்து வழிப்பாடு நடத்தி வந்தனர்.
இதனையடுத்து ஆண்டு தோரும் பங்குனி மாதம் பவுர்ணமி உத்திரம் முன்னிட்டு, 108 பால் குடங்களை 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்து மூலவருக்கு, அபிஷேகம் செய்தனர்.
இதனை தொடர்ந்து வடை மாலை, துளசி மாலை அணிவித்து, தீபாராதனை நடந்தது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை, பஜனை குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. இதில், ஒடுகத்தூர், பெரிய ஏரியூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதனையடுத்து பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.






