என் மலர்
நீங்கள் தேடியது "லாரி மோதி 2 மாணவிகள் படுகாயம்"
- பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
கே.வி.குப்பம் தாலுகா கீழ் முட்டுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சரண்யா (வயது 17), ரூஷா டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் குமார் என்பவரின் மகள் ஷாலினி (17).
இருவரும் கே.வி.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். நேற்று கடைசி தேர்வை எழுதிவிட்டு மோட்டார்சைக்கிளில் குடியாத்தத்தில் பொருட்களை வாங்க வந்தனர். சரண்யா மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
குடியாத்தம் காட்பாடி ரோடு அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி அருகே சென்று கொண்டு இருக்கும் போது பின்னால் வந்த லாரி இவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மாணவிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.






