என் மலர்
நீங்கள் தேடியது "The dead electrician பிணமாக கிடந்த எலக்ட்ரீசியன்"
- கணேசன் (வயது 40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு குடிபெயர்ந்தார்.
- பின்னர் எலக்ட்ரீசியன் வேலை உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
சேலம்:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் எலக்ட்ரீசியன் வேலை உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அரிசிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் வாயில் நுரை தள்ளியபடி கணேசன் இறந்து கிடந்தார்.
இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில், கணேசனுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும். இதனால் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






