என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்கொடை கேட்டு நெருக்கடி"

    • அரசியல் கட்சி பிரமுகர் மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

    குடியாத்தம் வணிகர்கள் மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    மனுவில் கூறியிருப்பதாவது:-

    குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய சிறிய துணிக்கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசியல் கட்சியின் குடியாத்தம் நகர பிரமுகர் நன்கொடை கேட்டு அப்பகுதி வணிகர்களை அணுகியுள்ளார்.

    வணிகர்களும் நன்கொடை வழங்கி உள்ளனர். ஆனால் பெருந்தொகையினை பிரமுகர் கேட்டுள்ளார். வணிகர்கள் பெரும் தொகையை தர மறுத்துள்ளனர்.

    அதை மனதில் வைத்து அவர் பண்டிகை காலங்களில் தெருவில் கூடும் கூட்டத்தை படம் பிடித்து வணிகர்கள் தெருவில் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என புகார் அளித்தார்.

    அப்போதும் வணிகர் சங்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வணிகம் செய்து வருகிறோம் நன்கொடை தர மறுத்த காரணத்தால் தொடர்ந்து வணிகர்கள் மீது போக்குவரத்து இடைஞ்சல் என புகார் அளித்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி இருந்தனர்.

    ×