என் மலர்
நீங்கள் தேடியது "சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது வழக்கு"
- பெற்றோர் முற்றுகை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள ஒரு பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு ஒரு தலைமை ஆசிரியர், 6 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு படிக்கும் மாணவிகளை ஆங்கில ஆசிரியர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.
பின்னர் இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






