என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் குழாய் அமைத்துத்தர வேண்டும்"
- எங்கள் பகுதி மேடாக உள்ளதால் குடிநீர் சீராக வருவதில்லை.
- சாக்கடைக் கால்வாயை தூர்வாரி 5 ஆண்டுகள் ஆகிறது.
கிருஷ்ணகிரி,
சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதி திருவண்ணாமலை சாலை, முதல் கிராஸ் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 8 நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இன்றி சிரமத்திற்குள்ளான பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து நேற்று மதியம் திருவண்ணாமலை சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.
மேலும் நகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து உடனே குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை
மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதி மேடாக உள்ளதால் குடிநீர் சீராக வருவதில்லை. எங்களுக்கு தனியாக கேட் வாழ்வு அமைத்துத்தர வேண்டும் என்று பல முறை கோரிக்கை
வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் வால்வை திறப்பவர் அடிக்கடி மது குடித்து விட்டு தண்ணீர் திறப்பதில்லை. இதனால் குடிநீர் சீராக கிடைப்பதில்லை. மேலும் குடிநீர் குழாய் அனைத்தும் சாக்கடைக் கால்வாயில் அமைத்துள்ளது. இதனால் சாக்கடைக் கால்வாயில்தான் தொடர்ந்து குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகிறோம். சாக்கடைக் கால்வாயை தூர்வாரி 5 ஆண்டுகள் ஆகிறது.
ஆகவே கால்வாயை தூர்வாரி, குடிநீர் குழாயை சுகாதாரமான இடத்தில் அமைத்து, கேட் வால்வு ஒன்றையும் அமைத்துத்தர வேண்டும். மேலும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






