என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் வாகன சோதனை"

    • குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளிபட்டு கூட்ரோடு அருகில் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் குற்ற தடுப்பு நடவடிக்கைளுக்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஆரணி முள்ளிப்பட்டு ஜங்ஷன் சேவூர் பைபாஸ் சாலை, இரும்பேடு ஜங்ஷன், ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென வாகன சோதையில் ஈடுபட்டனர்.

    மேலும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களை விசாரித்து முழு சோதனை செய்து விவரங்களை திரட்டி பின்னரே அனுப்பி வைத்தனர்.

    சோதனையில் சந்தேகத்துக்கு உட்பட்ட நபர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×