என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிலில் சிறப்பு அபிஷேகம்"

    • ராமநவமியை முன்னிட்டு நடந்தது
    • பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

    செங்கம்:

    செங்கம் ஸ்ரீவீரசுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒவ்வொரு வருடமும் செங்கம் வீரசுந்தர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    இந்நிலையில் இன்று ராமநவமியை முன்னிட்டு செங்கம் ஸ்ரீவீரசுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள மூலவரான ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து ஸ்ரீராமர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மகாதீபராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமநாமம் சொல்லி வழிபட்டனர்.

    ×