என் மலர்
நீங்கள் தேடியது "புகார் மீது உடனடி நடவடிக்கை"
- குகை சாமுண்டி தெருவை சேர்ந்தவர் கோகிலாவாணி (வயது 46).
- 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டிற்கு செல்லும் குடிநீர் இணைப்பை எந்த முன் அறிவிப்பும் இன்றி மாநகராட்சி ஊழியர் துண்டித்தனர்.
சேலம்:
சேலம் குகை சாமுண்டி தெருவை சேர்ந்தவர் கோகிலாவாணி (வயது 46). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டிற்கு செல்லும் குடிநீர் இணைப்பை எந்த முன் அறிவிப்பும் இன்றி மாநகராட்சி ஊழியர் துண்டித்தனர்.
இது குறித்து கோகிலாவாணி மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். இதையடுத்து அவருக்கு உடனடியாக குடிநீர் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து ஊழியர்கள் குடிநீர் இணைப்பு வழங்கினர்.






