என் மலர்
நீங்கள் தேடியது "நியமன சான்று"
- 270 பேருக்கு வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் புதிய பொறுப்பாளர்களுக்கு நியமனச் சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் சி.ஜி. ராமசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைதலைவர் தீனதயாளன், மாநில மாணவர் சங்க செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளரும் கைனூர் ஊராட்சி மன்ற தலைவ ருமான உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்
க.சரவணன்,மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் கலந்து கொண்டு மாவட்ட,நகர,ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள் 270 பேருக்கு நியமனச் சான்று வழங்கினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் கோ.ஏழுமலை, அரக்கோணம் தொகுதி ஒன்றிய செயலாளர்கள் ஜெயசங்கர், கிருஷ்ணன், அரிதாஸ், மணி, முத்து, பாலாஜி, தியாகு, மணிகண்டன், பரமேஸ்வரன், பெருமாள், ஏழுமலை, ஜோதிஸ்வரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அரக்கோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடேசன் நன்றி கூறினார்.






