என் மலர்
நீங்கள் தேடியது "சத்துணவுகூடம் திறப்பு"
- ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவு கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
- தெரு விளக்குளை தேன்கனிக்கோட்டை மின் வாரிய உதவி பொறியாளர் தேன்மொழி பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மல்லசந்திரம் ஊராட்சி அளேநத்தம் கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவு கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி ரிப்பன் வெட்டி, சமையலறைகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மல்லசந்திரம் ஊராட்சி தலைவர் சுரேகா முனிராஜ், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் ஓசூர் கூட்ரோடு முதல் அளே நத்தம் வரை புதிதாக அமைக்கப்பட்ட எல் ஈடி தெரு விளக்குளை தேன்கனிக்கோட்டை மின் வாரிய உதவி பொறியாளர் தேன்மொழி பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, மல்லசந்திரம் ஊராட்சி தலைவர் சுரேகா முனிராஜ், துணை தலைவர் மஞ்சுளா, தொழிலதிபர் வசந்தப்பா, கூட்டுறவு வங்கி தலைவர் ரவிகுமார், ரமேஷ், ஊராட்சி செயலாளர் மகேஷ்குமார், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






