என் மலர்
நீங்கள் தேடியது "சிப்காட் அமைக்க எதிர்ப்பு"
- ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். மார்ச் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 11.22 மி.மீ. குறைவாக மழை பெய்துள்ளது.
- மோக னூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை தடை செய்ய வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தின், ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். மார்ச் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 11.22 மி.மீ. குறைவாக மழை பெய்துள்ளது.
2023-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை நெல் 10,415 எக்டர், சிறுதானி யங்கள் 79,624 எக்டர், பயறு வகைகள் 11,252 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 33,235 எக்டர், பருத்தி 4,286 எக்டர் மற்றும் கரும்பு 10,300 எக்டர் என மொத்தம் 1,49,112 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 635 எக்டர், கத்திரி 590 எக்டர், வெண்டை 419 எக்டர், மிளகாய் 367 எக்டர், மரவள்ளி 15722 எக்டர், வெங்காயம் 4549 எக்டர், மஞ்சள் 1729 எக்டர் மற்றும் வாழை 2590 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுகளை தயாரிப்பதைத் தடுக்கும் வகையில், கேட்ட ரிங் சமையல் தொழில் செய்பவர்கள் கட்டாயம் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாமக்கல் மாவட்டத்தின் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பினை, நாமக்கல் மாவட்ட இணைய முகப்பில் பதிவேற்றம் செய்யப்படும்.
முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பி னர்களுக்கு திருமண உதவி, முதியோர் ஓய்வூதியம் விபத்து நிவாரணம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தும் வகையில் விவசாயிகள் மற்றும் வேளாண் கூலித் தொழிலாளிகள் கிராம நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு இத்திட்டத்தின் கீழ் உறுப்பி னராக சேர்ந்து கொள்ள லாம் என கலெக்டர் தெரிவித்தார்.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
வெளிநடப்பு
கூட்டத்தில் கலந்து கொண்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக விவசாய முன்னேற்றக்கழம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள், நாமக்கல் மாவட்டம் மோக னூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு மாவட்ட கலெக்டர் விளக்கம் அளிக்க மறுத்ததால், திரளான விவசாயிகள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த னர். கூட்டத்தில், டி.ஆர்.ஓ மணிமேகலை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா, வேளாண்மை இணை இயக்குநர் துரை சாமி, கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதி காரிகள் கலந்துகொண்ட னர்.






