என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beginning of the festival of தேர்த் திருவிழா தொடக்கம்"

    • பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
    • கடந்த 19-ந் தேதி இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. கடந்த 19-ந் தேதி இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    காப்பு கட்டும் விழா

    அதனை தொடர்ந்து செல்லாண்டி அம்மன், கொங்கலம்மன் கோவில்களி லும் காப்பு கட்டும் விழா நடைபெற்றது. நேற்று முதல் வருகிற 25-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்கார மும் நடைபெறுகிறது.

    அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

    26-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், கிராம சாந்தியும் நடைபெறுகிறது. 27-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை தினந்தோறும் கட்டளை தாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

    ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், பரிவட்டம் சூட்டுதலும் நடைபெறுகிறது.

    4-ந் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. 5-ந் தேதி இரவு பொங்கல், மாவிளக்கு பூஜையும், 6-ந் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், 7-ந் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

    • பிரசித்தி பெற்ற நரசிம்மர் சாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும்.
    • இன்று காலை 11 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் சாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும்.

    இதயொட்டி இன்று காலை 11 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 6-ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு நரசிம்மர் சாமி உடனுறை நாமகிரி தாயார் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளன.

    இன்று முதல் தேர்த் திருவிழா வரை இரவு நேரத்தில் பலவித சிறப்பு வாகனங்களில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடை பெறு கின்றன.

    வருகிற 4-ந் தேதி நரசிம்மர்-நாமகிரி தாயார் திருக்கல்யாணம், நாமக்கல் குளக்கரை நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லசாமி மற்றும் உறுப்பினர்கள் கோவில் அதிகாரிகள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    ×