என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death of an electrician எலக்ட்ரீசியன் சாவு"

    • சின்னாக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் லோகேஷ் (வயது 29). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
    • ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலுக்கு குளிக்க சென்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சின்னாக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் லோகேஷ் (வயது 29). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, அங்கு குளித்துக் கொண்டிருந்த லோகேஷை காணவில்லை. அவர் வீட்டிற்கு சென்று விட்டதாக நினைத்து அவரது நண்பர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு லோகேஷ் வராததை அறிந்த நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்கள், மீண்டும் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதிக்கு சென்றனர்.

    அங்குள்ள ராஜா வாய்க்காலில் மீனவர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் லோகேஷை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் மீண்டும் நேற்று காலை நாமக்கல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் லோகேஷை தேடினர்.

    அப்போது, லோகேஷ் உடல் ஜேடர்பாளையம் பரிசல்துறை அருகே உள்ள ராஜா வாய்க்காலில் கரை ஒதுங்கி இருந்தது. இதையடுத்து லோகஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×