என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்கள் 2 பேர் சாவு"

    • டயரில் சிக்கி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் மதினா நகரை சேர்ந்தவர்கள் இஸ்மாயில் மகன் முகமது ஷெரீப் (வயது 17). ரபிக் மகன் ஏஜாஸ் (17)அந்த பகுதியில் உள்ள இரும்புக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இரவு முகம்மது ஷரீப் அவரது நண்பர் ஏஜாஸ் சத்துவாச்சாரியில் இருந்து கொணவட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் வந்த போது கண்டெய்னர் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    முகமது ஷெரிப் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார். அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் ஏ ஜாஸ் பலத்த காயமடைந்தார்.

    வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி ஏஜாஸ் இன்று காலை இறந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×