என் மலர்
நீங்கள் தேடியது "நந்திக்கு பூஜை"
- பிரதோஷத்தை முன்னிட்டு நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் ஆலயத்தில் பிரதோஷம் முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் தயிர் தேன் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து பட்டு வஸ்திரம் அணிவித்து, அருகம்புல் மாலை மலர் மாலை அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது.
இதில் 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள்.






