என் மலர்
நீங்கள் தேடியது "பா.ம.க. கூட்டம்"
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் சி.ஜி. ராமசாமி தலைமையில் நடந்தது.
நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.குணசேகரன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் க.சரவணன், சோளிங்கர் ஒன்றிய குழு உறுப்பினரும் மாவட்ட தலைவருமான அ.மா. கிருஷ்ணன் சிறப்புரையாற்றினர்.
அன்புமணி ராமதாஸ் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்கு வர இருப்பதால் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் கிளைகளிலும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து பெரிய அளவில் வரவேற்பை தர வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






