என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரு நாய் கடி"

    • பொதுமக்கள் பீதி
    • நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாசா பேட்டை பகுதியில் அதிகப்படியான நாய்கள் தெருக்களில் சுற்றித்திரிகின்றன. இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் அச்சம டைந்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதி யைச் சேர்ந்த கோகுல் (வயது 10), திவ்யா (12), கோபால் (8), நிலா (II), கோடீஸ்வரி (23) உள்பட 7 பேரை நாய் கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் ஆற்காடு அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்றனர்.

    மக்களை பெரிதும் அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×