என் மலர்
நீங்கள் தேடியது "உண்டியல் காணிக்கை வசூல்"
- இணை ஆணையர் முன்னிலையில் திறக்கப்பட்டது
- 405 கிராம் தங்கமும், 2 கிலோ 385 கிராம் வெள்ளியும் இருந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள் ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் கோவிலின் பின்பு றம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் லட் சக்கணக்கான பக்தர்கள் திரு வண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நிறைவடைந்த பின்னர் ஒரு வாரத்திற்குள் அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெறும்.
அதன்படி, நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பா தையில் அஷ்டலிங்ககோவில் களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு கோவிலில் இணை ஆணையர் குமரேசன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
இதில் ரூ.2 கோடியே 81 லட்சத்து 18 ஆயிரத்து 750-ம், 405 கிராம் தங்கமும், 2 கிலோ 385 கிராம் வெள்ளியும் உண்டி யல் காணிக்கையாக பெறப் பட்டது.






