என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச வெறிநோய் தடுப்பூசி"

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
    • 150 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது

    வேலூர்:

    தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

    இதனையொட்டி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று முதல் வீட்டு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்படுகிறது.

    வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஹரிஷ்புட்ஜோன் வளாகத்தில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச வெறிநாய் தடுப்பு முகாமினை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வேனில் 150 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக கே.வி.குப்பம், அணைகட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா. லத்தேரி, திருவலம், பென்னாத்தூர், ஏரிகுத்தி, காட்பாடி, ஒடுகத்தூர் ஆகிய அரசு கால்நடை மருத்துவ மனைகளில் மார்ச் மாதம் இறுதி வரை தொடர்ச்சியாக நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் 1590 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி மேற்கொள்ளப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×