என் மலர்
நீங்கள் தேடியது "2 பேரும் உடல்நசுங்கி இடத்திலேயே பரிதா பமாக உயிரிழந்தனர்"
- லாரியை முந்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நேருக்கு நேர் பலமாக மோதியது
- 2 பேரும் உடல்நசுங்கி இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி 1-வது வார்டை சேர்ந்த அண்ணாமலை மகன் வசந்தபிரசாத் ( வயது 22). இவரது நண்பர் வைத்திய கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பூமலை மகன் யுவராஜ் (22).
இருவரும் நேற்று வாழப்பாடியில் இருந்து பெரிய கிருஷ்ணாபுரம் நோக்கி இரு சக்கர வாக னத்தில் சென்றனர். கொட்ட வாடி பிரிவு சாலை அருகே லாரியை முந்த முயன்ற போது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த விபத்தில் வசந்த பிரசாத், யுவராஜ் ஆகிய 2 பேரும் உடல்நசுங்கி வாலி பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதா பமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






