என் மலர்
நீங்கள் தேடியது "வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம்"
- செம்பட்டி அருகே 15-க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்ததில் காயமடைந்தனர்
- வெறி நாயை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியில் வெறி நாய் தெருவுக்குள் நடமாடி யது. எஸ்.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமாயி (வயது60), கருப்பாயி (53), இந்திரா (60), சிறுமி ஹன்சிகாஸ்ரீ (7), பிரியா (28), இந்திராணி (48), ராஜாத்தி (60), சஞ்சய், ராஜேஷ் உள்பட 15-க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்ததில் காயமடைந்தனர்.
அவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் படுகாயம் அடைந்த ராமாயி திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் வெறி நாய் கடித்ததில் சாமிதேவர் என்பவருடைய 2 ஆடுகள் பலியானது. ஐயப்பன் என்பவர் மாடு வெறிநாய் கடித்ததில் ஆபத்தான நிலையில் உள்ளது.
கோழிகள், குட்டி நாய்கள் என வெறி நாய் கண்ணில் தென்பட்டது அனைத்தையும் கடித்து வருவதால் கிராம பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். எஸ்.பாறைப்பட்டி கிராமத்தில் வெறிநாய் தொல்லை இருப்பதால் இங்குள்ள குழந்தைகள் படிக்கும் 2 அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் கேட்டை மூடி, குழந்தைகளை பாது காப்பாக வைத்துள்ளனர்.
தொடர்ந்து பீதி அடைந்து வருவதால் வெறி நாயை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






