என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்னியர் மக்கள் கட்சி"

    • 10.5 சதவீதம் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வன்னியர் மக்கள் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
    • 1000-க்கும் மேற்பட்ட வன்னியர் மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வன்னியர் மக்கள் கட்சி சார்பில் 10.5 சதவீத வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த கோரி காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தை வன்னியர் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சக்தி படையாட்சி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    வன்னியர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் நாயகர் முன்னிலையில் அமைப்பு செயலாளர் குணசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கன்னியப்பன் வரவேற்று பேசினார். திருபெருமந்தூர் தொகுதி செயலாளர் பூபாலன், மாநில தொண்டர் அணி செயலாளர் முரளி, மாநில துணை தலைவர் ராஜா, தலைமை நிலைய செயலாளர் ராமலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விவசாய அணி பொது செயலாளர் திருக்குறள் ஆறுமுகம், தமிழ்நாடு வன்னியர் பேரவையின் மாநில தலைவர் ஐயப்பன், பொது செயலாளர் ஆனந்த், தமிழ் பத்திரிகையாளர்கள் சங்க பொது செயலாளர் கண்ணன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுகந்த், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் சம்பத், மத்திய மாவட்ட தலைவர் கண்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் தாமோதரன், அருண்குமார், மணிகண்டன், ஹரிகரன், சூர்யா, அஜித்குமார், இளையா, சுந்தரி, ராஜேஸ்வரி சதீஷ்குமார், ஹரிஹரன், சக்தி, சதீஷ், ரவிச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    10.5 சதவீதம் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வன்னியர் மக்கள் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதில் 1000-க்கும் மேற்பட்ட வன்னியர் மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    ×