என் மலர்
நீங்கள் தேடியது "நிலமற்ற பயனாளிகள்"
- வீடு கட்ட பட்டா வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது
- 736 பயனாளிகள் குறித்து அதிகாரி கேட்டறிந்தார்
அணைக்கட்டு:
பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவது மற்றும் பட்டா வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தாசில்தார் ரமேஷ் பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி முன்னிைல வகித்தனர். இதில் டிஆர்ஓ ராமமூர்த்தி கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிஎம்ஏஒய் திட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவது. வீட்டு மனை இல்லாதவர்களுக்கு அரசு நிலம் கொடுத்து வீடு கட்டி கொடுப்பது தொடர்பான கனக்கெடுக்கும் பணி துவங்கி அதில் சுமார் 736 பயனாளிகள் தேர்வாகினர். இவர்களுக்கு இதுவரை யார் யார் வீடு, நிலம் இல்லாமல் இருக்கின்றார்கள் என ஆய்வு செய்து அப்பணியை உடனடியாக துவங்குவது தொடர்பாக கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் மண்டல துணை பிடிஓக்கள், ஊராட்சி செயலாளர்கள், விஏஓக்கள் ஆகியோர்களிடம் தனித்தனியாக இடம் அற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பயனாளிகளை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
பயனாளிகளுக்கு முன்னதாக வேறு எங்கயாவது இடம் உள்ளதா? தற்போது சொந்தமாக வீடுகள் ஏதாவது கட்டியுள்ளார்களா? எனவும் அவர்களின் தற்போதைய பொருளாதார நிலை உள்ளிட்ட விலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தினார்.
வீடுகள் வழங்க தேர்வு செய்யப்பட்ட 736 பயனாளிகளின் குறித்து விவரங்களையும் டிஆர்ஓ கேட்டறிந்தார்.
இறுதியாக பிஎம்ஏஓய் திட்டத்தில் வீடு வழங்க இடம் இல்லாதவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு பட்டா வழங்க அரசுக்கு சொந்தமான இடங்களை விரைவாக தேர்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அதனை ஆய்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்கப்படும். பட்டா வழங்கியதும் அந்த பயனாளிகளுக்கு இந்த திட்டத்தில் கீழ் வீடு கட்ட பணி ஆணைகள் வழங்க வேண்டும் என வருவாய்துறைக்கும், பிடிஓக்களுக்கும் டிஆர்ஓ உத்தரவிட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் அறிவழகன், ஆஷா ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






