என் மலர்
நீங்கள் தேடியது "போலீசாருக்கு ஜூஸ்"
- போக்குவரத்து போலீசாருக்கு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மோர் மற்றும் ஜூஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- சேலம் கலெக்டர் அலுவலகம் ரவுண்டானா அருகே நடந்தது. துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா தலைமை தாங்கி போலீசாருக்கு ஜூஸ், மோர், தர்பூசணி ஆகியவை வழங்கினார்கள்.
சேலம்:
தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலக உத்தரவுப்படி கோடைக் காலத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசாருக்கு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மோர் மற்றும் ஜூஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சேலம் மாநகரத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு மோர் மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடக்க நிகழ்ச்சி சேலம் கலெக்டர் அலுவலகம் ரவுண்டானா அருகே நடந்தது. துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா தலைமை தாங்கி போலீசாருக்கு ஜூஸ், மோர், தர்பூசணி ஆகியவை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் ராஜராஜசோழன், குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, சேலம் மாநகரத்தில் தினமும் 110 போக்குவரத்து போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக லெமன், மோர் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக 4 மாதம் வழங்கப்படும். மேலும் தலையில் அணிந்து கொள்ள கூலிங் தொப்பி வழங்கப்பட்டது, என்றனர்.






