என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் உள்பட 2 பேர் தற்கொலை"

    • 9ம் வகுப்பு படித்து வந்தா மாணவரும், குடி பழக்கம் உள்ளவரும் மன உளைச்சலில் இருந்து வந்தனர்.
    • சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை

    தேனி:

    தேனி அருகே தெப்பம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமரன் மகன் தனுஷ் (வயது14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டிலேயே தனுஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை இது குறித்து ராஜதானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது37). இவருக்கு குடி பழக்கம் இருந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×