என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "50 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள்"

    • இந்த சந்திப்பில் இந்த ஆண்டு பள்ளிக்கு செய்யப்படும் நல திட்டங்கள் குறித்து கலந்தாய்வு மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • ரூ. 5 லட்சம் நிதி திரட்டி பள்ளிக்கூடத்திற்கு புதிதாக சத்துணவு கூடம் அமைத்து தந்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி பழமை வாய்ந்த அரசு நிதி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 1972 -73 ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் அமைப்பின் 2-வது ஆண்டு சந்திப்பு நடைபெற்றது.

    சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னால் கடந்த ஆண்டு இதே நாள் முதலாம் சந்திப்பில் மகிழ்ந்த மாணவர்கள் 2-வது ஆண்டு சந்திப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    65 வயதை தாண்டிய அனைவரும் பள்ளிக்குள் 15 வயது மாணவ-மாணவியர்களாய் தங்களை நினைத்து நெகிழ்ந்தனர். இந்த சந்திப்பில் இந்த ஆண்டு பள்ளிக்கு செய்யப்படும் நல திட்டங்கள் குறித்து கலந்தாய்வு மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த ஆண்டு சந்திப்பில் திட்டமிட்டபடி தாங்கள் பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் அமைப்பின் மூலம் ரூ. 5 லட்சம் நிதி திரட்டி பள்ளிக்கூடத்திற்கு புதிதாக சத்துணவு கூடம் அமைத்து தந்தனர்.

    இந்த ஆண்டு தாங்கள் கட்டித் தந்த சத்துணவு கூட கட்டிடத்திற்கு முன்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்கள் நினைவுகளைபகிர்ந்து கொண்டனர்.

    தங்கள் காலத்திற்குப் பின்னும் கட்டித் தந்த இந்த கட்டிடம் பெயர் சொல்லும் என்று நெகிழ்வுடன் கூறினர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் ராமசுப்பிரமணியன், பள்ளித் தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணி, நட்பூஸ் 1972-73 முன்னாள் மாணவர்கள் சங்க அமைப்பின் செயலாளர் சையது இப்ராஹிம், பொருளாளர் செல்லத்துரை, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயபாஸ்கரன் பாண்டியன், கண்மணி சிவக்குமார் முருகராஜ், முன்னாள் நண்பர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

    ×