என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிலையத்தில் ஆண் பிணம்"

    • அவர் யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. அதன் நுழைவு வாயில் அருகே இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

    அங்கிருந்து அவர்கள் இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த கிடந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் வெளியூரில் இருந்து புதிய பஸ் நிலையம் வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்து கிடந்த நபர் நீள நிற டி-ஷர்ட்டும், வெள்ளை நிற பேண்டும் அணிந்துள்ளார்.

    ×